சென்னையில் 2வது நாளாக கடல் கொந்தளிப்பு-மீனவர்கள் தவிப்பு
சென்னை: சென்னையில் இன்றும் இரண்டாவது நாளாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சில கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.
சென்னையில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. நகரம் முழுவதும் பலத்த சூறைக் காற்று வீசியது.
சுமார் 20 அடி உயரத்தில் ராட்சத அலைகள் எழுந்து, கரையில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளையும், கட்டுமரங்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்றன. பின்னர் பல மடங்கு அதிக வேகத்தில் அவை கரை ஒதுக்கின. இதில் பல படகுகள் சேதமடைந்தன.
திருவொற்றியூர், மெரினா, நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. பல பகுதிகளில் கிராமங்களுக்கு நீர் புகுந்தது.
இந் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் எண்ணூர், எர்ணாவூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம் ஆகிய கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
கடலின் சீற்றம் மீண்டும் அதிகரித்ததை அடுகத்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் கடல் சீற்றம் ஏற்படும். ஓரிரு நாட்களுக்கு பின் சீற்றம் குறைந்து கடல் சகஜ நிலைக்கு திரும்பிவிடும். இதை மீனவர்கள் 'வைகாசி வாங்கல்' என அழைக்கிறார்கள்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications