சென்னையில் 2வது நாளாக கடல் கொந்தளிப்பு-மீனவர்கள் தவிப்பு
சென்னை: சென்னையில் இன்றும் இரண்டாவது நாளாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சில கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.
சென்னையில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. நகரம் முழுவதும் பலத்த சூறைக் காற்று வீசியது.
சுமார் 20 அடி உயரத்தில் ராட்சத அலைகள் எழுந்து, கரையில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளையும், கட்டுமரங்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்றன. பின்னர் பல மடங்கு அதிக வேகத்தில் அவை கரை ஒதுக்கின. இதில் பல படகுகள் சேதமடைந்தன.
திருவொற்றியூர், மெரினா, நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. பல பகுதிகளில் கிராமங்களுக்கு நீர் புகுந்தது.
இந் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் எண்ணூர், எர்ணாவூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம் ஆகிய கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
கடலின் சீற்றம் மீண்டும் அதிகரித்ததை அடுகத்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் கடல் சீற்றம் ஏற்படும். ஓரிரு நாட்களுக்கு பின் சீற்றம் குறைந்து கடல் சகஜ நிலைக்கு திரும்பிவிடும். இதை மீனவர்கள் 'வைகாசி வாங்கல்' என அழைக்கிறார்கள்.
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்!











Click it and Unblock the Notifications