சென்னை-கோவையில் எல்காட் சாப்ட்வேர் பார்க்!

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த 3 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்துறை தமிழகத்தில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையை மேலும் மேபடுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய நகரங்களில் எல்காட் சார்பாக சாப்ட்வேர் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
சென்னை, கோவையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் செயல்படும்.
உலக பொருளாதார வீழ்ச்சியால் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பு பெரிய அளவில் குறையவில்லை. ஆனால் புதிதாக ஆட்களை எடுப்பது குறைந்துள்ளது.
தலைமை செயலகத்தில் உள்ள பல துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி படிப்படியாக அமலாக்கப்படும். முதல் கட்டமாக வணிக வரித்துறையின் செயல்பாடு கம்ப்யூட்டர் யமாக்கப்பட்டுள்ளது. இதே போல பதிவுத்துறை, வேளாண்மை, சுகாதாரத் துறைகளையும் கம்ப்யூட்டர்மயமாக்கும் பணி நடக்கிறது.
அனைத்து துறைகளும் படிப்படியாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டால் எழுதும் வேலைக்கே இடம் இல்லாமல் போகும். போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது.
எல்காட் மூலம் மாணவர்களுக்கு குறைந்த விலையில் லேப்-டாப் வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்க திட்டமிட்டதில் இதுவரை 3,000 பேர் மட்டுமே இதை வாங்கியுள்ளனர். ரூ.45,000 மதிப்புள்ள இந்த லேப்-டாப் ரூ. 31,717க்கு விற்கப்படுகிறது.
எல்காட் நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.13.25 கோடி லாபம் ஈட்டியது என்றார் பூங்கோதை.
பேட்டியின்போது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் டேவிதார், எல்காட் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications