ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க முயற்சியா?
மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுவது தனியார்மயமாக்கலை ஊக்கப்படுத்த அல்ல. மாறாக நிறுவனத்துக்குத் தேவையான அதிகபட்ச முதலீட்டைப் பெறவும் நிதி நெருக்கடியில் சிக்கி மற்ற நிறுவனங்களைப் போல தடுமாறாமல் இருப்பதற்காகவுமே என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் புதி்ய பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
காரணம் கடந்த ஆண்டு மட்டும் இந்த அரசுத் துறை விமான நிறுவனத்துக்கு ரூ. 4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலை ஏற்றம், பயணிகள் குறைவு போன்றவற்றால் இந்த நிலை. இதைச் சரிகட்ட இந்த ஆண்டு புதிய முதலீடுகளைச் செலுத்த முடிவு செய்த ஏர் இந்தியா, இதற்காக ரூ. 1,231 கோடிக்கு புதிய பங்குகளை வெளியிடவும், ரூ. 2750 கோடிக்கு புதிய கடன்கள் வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு திட்ட வரைவை அனுப்பியது.
இதில் சில திருத்தங்களைச் சொன்ன மத்திய அரசு, இப்போதைக்கு புதிய பங்குகள் வெளியிட மட்டும் அனுமதி கொடுத்துள்ளது. புதிய கடன்கள் குறித்து சில ஆட்சேபங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், விமான நிறுவனத்தை தனியாருக்கு முற்றாக தாரை வார்க்கும் முயற்சி இது என பலவித விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது:
ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க நாங்கள் முயலவில்லை. இந்த பங்கு வெளியீடு மூலம் ஏர் இந்தியா தனது மூதலீட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பங்குகளை சந்தையில் விடுவது உடனடியாக நடந்துவிடாது. பங்குச் சந்தை நிலையாக மாறிய பிறகே நடக்கப் போகிறது.
சொல்லப் போனால், இனி எந்த விமான நிலையத்தையும் தனியார்மயமாக்குவதில்லை என்ற புதிய முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். ஏர் இந்தியா எப்போதும் அரசுத் துறை நிறுவனமாகவே தொடரும் என்றார்.
-
ரூ. 29 லட்சம் கோடி.. கடனை கட்டாமல் ஏமாற்றிய கோடீஸ்வரர்கள்.. வசூலிக்க முடியாமல் தவிக்கும் வங்கிகள் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications