பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் ஆயில் இந்தியா
Subscribe to Oneindia Tamil

வருகிற செப்டம்பரில் புதிய பங்குகளை இந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என ஆயில் இந்தியா நிறுவனத் தலைவர் என்எம் போராஹ் தெரிவித்துள்ளார்.
'பங்குச் சந்தை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து புதிய பங்கு வெளியீட்டுக்கான தேதியை முடிவு செய்ய ஆலோசகர்களுடன் விவாதித்து வருகிறோம். அரசின் அனுமதி கிடைத்த பிறகு இறுதித் தேதியை அறிவிப்போம்', என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நிறுவனத்தில் அரசின் வசம் உள்ள பங்குகளில் 10 சதவீதமும், புதிதாக 11 சதவீத பங்குகளும் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படுகிறது.
இதன் மூலம் ஆயில் இந்தியாவில் 98.13 சதவீதமாக இருந்த அரசின் பங்கு, 78.5 சதவீதமாகக் குறைகிறது.












Click it and Unblock the Notifications