விண்ணப்பித்த 60 நாட்களில் ரேசன் அட்டை-வேலு

பொது வினியோகத்துறை நிர்வாகம் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பின் நிருபர்களிடம் பேசிய வேலு,
புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தணிக்கை செய்து 30 நாட்களுக்குள் வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 60 நாட்களில் கார்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கான காரணங்களை விண்ணப்பத்தாரர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும்.
போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும். போலி என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும்.
நியாய விலை கடைகளில் பாமர மக்கள் அறியும் வகையில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தினந்தோறும் 5 நியாய விலை கடைகளை சோதனையிட்டு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் லாரிகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் தான் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டிய லாரிகளை காலை 9 மணிக்கே அனுப்ப வேண்டும். மாலை 4 மணிக்கு மேல் லோடு ஏற்றி அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications