நாகர்கோவில்-மாணவர்களை வெட்டிய கேரள கூலிப்படை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரத்தில் போலீசார் அதே கல்லூரியை சேர்ந்த நான்கு மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கேரள கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த தீபக், அனீஸ்குமார், கோட்டயத்தை சேர்ந்த அஸ்வின் குமார் ஆகியோர் படித்து வருகின்றனர்.
அவர்கள் புத்தேரி குறிஞ்சி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கும்பல் ஒன்று திடீரென இவர்களது வீட்டுக்குள் புகுந்து, அவர்களை சராமரியாக அரிவாளால் வெட்டியது.
மேலும், வீட்டில் இருந்த பைக், டிவி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோடி விட்டது. படுகாயமடைந்த மாணவர்கள் மூன்று பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அதே கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் உள்பட மொத்தம் 11 பேர் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சரத், விஜின், சதீஷ், நவீன் ஆகிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அந்த மாணவர்களுடன் வந்த கூலிபடையினர் தான் மூவரையும் சராமரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அந்த கும்பலில் இருந்தவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications