தமிழகத்தில் 7 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 2 கூடுதல் டி.ஜி.பிக்கள் உள்ளிட்ட ஏழு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து உள்துறைச் செயலாளர் மாலதி வெளியிட்ட உத்தரவில்,
சென்னை தேர்தல் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக பணிபுரிந்த வந்த ஆர்.சேகர் மாற்றப்பட்டு சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்து வந்த கூடுதல் டி.ஜி.பி. நரேந்திரபால் சிங், சென்னை ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட ஐ.ஜியாக பணியாற்றி வந்த ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த பி.சிவனான்டி மாற்றப்பட்டு அந்த இடத்தில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். சிவனான்டி, கோவை சரக டி.ஜி.ஐயாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கோவை சரக டி.ஜி.ஐயாக இருந்து வந்த டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி இடமாற்றம் செய்யப்பட்டு திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தேர்தல் பிரிவு போலீஸ் எஸ்பியாக பணிபுரிந்து வந்த எஸ்.பாஸ்கரன் மாற்றப்பட்டு, சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications