திருச்சி மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்வு!
திருச்சி: திருச்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான், திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காலியான மேயர் பதவிக்கு இன்று தேர்தல் நடந்தது. இதற்கான வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியில் பெரும் கோஷ்டி மோதல் நடந்தது.
இறுதியாக நேற்று தான் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரான சுஜாதா (38) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 கவுன்சிலர்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 40 கவுன்சிலர்களும், அதிமுக கூட்டணிக்கு 20 கவுன்சிலர்களும் உள்ளனர். இதனால் சுஜாதாவை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று நடந்த தேர்தலில் சுஜாதா போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. கவுன்சிலரான சுஜாதா, திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் உள்ளார்.
இவரும் சாருபாலாவைப் போலவே மத்திய அமைச்சர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications