மீண்டும் 15,000 புள்ளிகளை கடந்த பங்குச் சந்தை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்செக்ஸ் இன்று மீண்டும் 15000 புள்ளிகளைத் தாண்டி ஸ்டெடியாக நிற்கிறது சென்செக்ஸ்.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய நேரத்தில் மைனஸில் இருந்த சென்செக்ஸ் பின்னர் மீண்டும் ஏற்றம் கண்டது.
வர்த்தக நேர முடிவில் 141 புள்ளிகள் உயர்ந்து 15012.36 ஆக சென்செக்ஸ் நிலைபெற்றது.
நிப்டியில் 40 புள்ளிகள் உயர்ந்தன.
ரான்பாக்ஸி லேபாரட்டரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி, கிராஸிம் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், விப்ரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நஷ்டமடைந்தன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் அனைத்தும் இன்று நல்ல ஏற்றம் கண்டதாலேயே இந்தியச் சந்தை உயர்ந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications