'ரெளடிகள்': ஒடுக்க கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் அதிரடி

மிக நேர்மையான அதிகாரியான இவர் சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் தமிழக சட்டம்- ஒழுங்குப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை கமிஷனராக இருந்த போது நகரில் ரெளடிகள் ஒழிப்பில் தீவிரம் காட்டிய இவர் இப்போது மாநிலம் முழுவதுமே ரெளடிக் கும்பல்களை கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள ரெளடிகள் பட்டியலை கேட்டு மாவட்ட எஸ்பிக்கள், நகர கமிஷ்னர்களுக்கு உத்தரவு அனுப்பியுள்ள இவர், அவர்களை 3 பிரிவுகளாக பிரிக்குமாறு கூறியுள்ளார்.
தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரெவுடிகள், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ரெளடிகளை 'ஏ' பிரிவில் இடம் பெறுவர். இவர்களை கூண்டோடு குண்டர் சட்டத்தில் பிடித்துத் தள்ள ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களுக்கு குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்களை மரியாதையாக நடத்த வேண்டும். புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
ரெளடிகளை அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் ஏ, பி, சி, என 3 பிரிவுகளாகப் பிரித்து லிஸ்ட் கேட்டுள்ளேன்.
தொடர்ந்து கொலை குற்றங்கள் மற்றும் பிறரைத் தாக்கும் செயல்களில் ஈடுபடுவோர் 'ஏ' பிரிவில் இடம் பெறுவர். இவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
'பி', 'சி' பிரிவுகளில் இடம் பெறும் ரெளடிகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட்டால் அவர்களது பெயரும் 'ஏ' பிரிவில் சேர்க்கப்படும்.
ரெளடிகளை ஒழிக்க முன்னுரிமை கொடுக்கப்படும்.
மேலும் வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களை உடனடியாக தேடிக்கண்டு பிடித்து கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகளையும் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் சேர்ப்போம். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் போலீஸ் நடவடிக்கை உறுதி.
அதே போல கள் இறக்குவோர், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவையில் மதக் கலவரம் நடந்தவுடன் அங்கு இவரைத் தான் கமிஷ்னராக நியமித்தார் அப்போதைய ஆட்சியில் இருந்த முதல்வர்
கருணாநிதி. அங்கு மதக் கலவரங்களை ஒடுக்கியதோடு, மதவாதக் கும்பல்களையும் அடக்கி, மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுத்தவர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications