தூத்துக்குடி சிமிண்ட் கடை அதிபரிடம் ரூ. 1 லட்சம் 'லபக்'
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சிமிண்ட் கடை அதிபரின் மோட்டார் சைக்களில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை மர்ம ஆசாமி ஒருவன் திருடி சென்றான்.
தூத்துக்குடி அருகை எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் எப்போதும் வென்றானில் சிமிண்ட் மற்றும் பெயின்ட் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று கடைக்கு மோட்டார் சைக்களில் ரூ. 1 லட்சத்துடன் ரவீந்திரன் வந்தார். அப்போது கடையில் சரக்கு வாகனத்தில் வந்த சரக்கு இறக்கி வைக்கும் வேலையில் மும்முரமாக நடந்து கொண்டிருந்ததால் அவர் அதை கவனித்து கொண்டிருந்தார்.
வெகு நேரம் கழித்து மோட்டார் சைக்கிளில் பை வைத்திருந்தது ஞாபகத்துக்கு வர, அங்கு சென்ற பார்த்த ரவீந்திரனுக்கு அதிர்ச்சி. பையை காணவில்லை. அப்போது தான் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ. 1 லட்சத்தை யாரோ திருடி சென்றிருப்பது அவருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவர் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications