துப்பாக்கிச் சூட்டில் தாவூத்-சகோதரர் படுகாயம்?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் அல் ஹபீப் வங்கியின் அருகே உள்ள தாவூதின் வீட்டுக்கு வெளியே நேற்றிரவு அனீஸ் மீது பலுசிஸ்தானைச் சேர்ந்த ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த தாவூத் மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சண்டையில் தாவூத், அனீஸ் இருவரும் படுகாயமடைந்துள்ளதாகக்த் தெரிகிறது. ரூ. 500 கோடி நில பேரத்தில் ஏற்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது.
ஆனால், அனீ்ஸ் மட்டும் தான் தாக்கப்பட்டதாகவும் தாவூத் தாக்கப்பட்டதாக தகவல் இல்லை என்றும் மும்பை போலீசார் கூறியுள்ளனர்.
மும்பையில் உள்ள தாவூதின் உறவினர்கள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுத்துள்ளனர். தாவூதோ, அனீசோ யாரும் காயமடையவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பங்கள் தொடர்பாக தாவூத், அவரது சகோதரர்களை இந்தியா தேடி வருகிறது. அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு அந் நாட்டு மறைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதை அந்த நாடு தொடர்நது மறுத்து வருகிறது.
பங்களாதேசுக்கு இடம் மாறும் தாவூத்:
இதற்கிடையே தீவிரவாதத்தை ஒடுக்க பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையாக நிர்பந்திக்க ஆரம்பித்துவிட்டதால் தாவூத் அந் நாட்டை விட்டு வெளியேறி பங்களாதேஷில் குடியேற திட்டமிட்டுள்ளதாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications