கேமராமேனின் செயலால் ஆத்திரம் - காதைத் திருகிய பிரணாப் முகர்ஜி
கொல்கத்தா: கேமராமேனின் செயலால் ஆத்திரமடைந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவரது காதைப் பிடித்துத் திருகினார்.
கொல்கத்தா வந்திருந்த பிரணாப் முகர்ஜி அங்கு நடந்த அய்லா புயல் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.
அப்போது விருந்தினர் இல்லத்திற்கு வருகை தந்த அவர் அங்கு ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர், அனுமதி இல்லாத இடத்திற்குள் புகுந்து தன்னை புகைப்படம் எடுக்க முயற்சித்ததைப் பார்த்துக் கோபமடைந்தார்.
இதையடுத்து கோபத்துடன் அவரது அருகில் சென்ற பிரணாப், கேமராமேனின் காதைப் பிடித்துத் திருகி, இங்கெல்லாம் வரக் கூடாது என்று தெரியாதா என்று கோபித்துக் கொண்டார். பின்னர் அவரது காதை விட்டு விட்டு உள்ளே சென்றார்.
காது திருகப்பட்ட புகைப்படக்காரரின் பெயர் சஞ்சய் சாட்டர்ஜி. டெலிகிராப் பத்திரிக்கையின் புகைப்படக்காரர் ஆவார்.
இந்த சம்பவத்தால் சில நிமிடம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications