For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் 26 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், ஆற்றில் பஸ் ஒன்று கவிழ்ந்து விழுந்தது. இதில் 26 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தோடா மாவட்டத்தில் உள்ள மலைப் பாதையில் அந்த பஸ் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தலைகுப்புற கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விட்டது.

பஸ் உருண்டு விழுந்தபோது அதிலிருந்து ஒரு குழந்தை உள்பட நான்கு பயணிகள் வெளியில் வந்து விழுந்தனர். அவர்கள் ஐந்து பேரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும் பலி குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஜம்முவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.

ஆற்றில் விழுந்த வேகத்தி்ல பஸ் முழுமையாக மூழ்கிப் போய் விட்டது. அதில் இருந்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராணுவ நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X