பிரபாகரன் உடலுக்கு நாங்கள்தான் யூனிபாரம் போட்டு விட்டோம்- ராணுவ தளபதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: அதிபர் ராஜபக்சே மே 19ம் தேதி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் வேறு உடையில்தான் இருந்தார். நாங்கள்தான் விடுதலைப் புலிகளின் சீருடையை அவரது உடலில் அணிவித்தோம் என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் கடைசி கட்டப் போரின்போது ஈடுபட்டிருந்த 53வது படைப் பிரிவின் தளபதியான கமல் குணரத்ன.

பிரபாகரன் குறித்து தொடர்ந்து மாறுபட்ட செய்திகளே வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் பிரபாகரன் உடலுக்கு நாங்கள்தான் டிரஸ் போட்டு விட்டோம், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் கமல் குணரத்ன.

ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பே பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக செய்திகள் உலா வரத் தொடங்கி விட்டன என்பது நினைவிருக்கலாம். ஆனால் ராஜபக்சே நாடாளுமன்றத்தில் பேசியபோது எதையும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லங்கதீப் என்ற சிங்கள இதழுக்கு கமல் குணரத்ன அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது...

19 ம் தேதி காலை 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் சென்ற எமது சிப்பாய் ஒருவர் என்னுடன் பேசினார். சார், பிரபாகரனின் உடல் இருக்கிறது என்றார். அவர் அப்படிக் கூறும்போது அதை நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. அப்போது சண்டை நடந்துகொண்டிருந்தது.

நான் அந்த உடலைக் காட்டிற்கு வெளியே கொண்டு வருமாறு கூறினேன். எனது சிப்பாய்கள் அந்த உடலை எனது காலடியில் கொண்டுவந்து போட்டனர்.

முழு இலங்கையும் பார்க்க ஆவலாக இருந்த உடலை நான் பார்க்கும் வரை உறக்கமின்றி இருந்தேன். அந்த உடலை தண்ணீரில் இழுத்துக்கொண்டு வரும்போது சுமார் 3000 சிப்பாய்கள் அங்கு கூடிவிட்டனர்.

19ம் தேதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார். பிரபாகரன் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு 2 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுவதெல்லாம் பொய்யானது.

பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே. பிரபாகரன் பற்றி கூறப்பட்ட பல கதைகளில் ஒரு கதை உண்மையானது. அதாவது, பிரபாகரனின் சடலத்திலிருந்த சீருடை பிரபாகரன் மரணடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல.

அது பிரபாகரன் மரணமடைந்த பின்னர் எம்மால் அணிவிக்கப்பட்ட ஆடையே. அந்தச் சீருடையை பிரபாகரனின் சடலத்திற்கு அணிவித்தவர்கள் எமது சிப்பாய்களே. அந்த சடலத்தைப் பார்த்த முதல் டிவிசன் தளபதி நானே. என்னால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

நான் ராணுவத் தளபதிக்கு அழைப்பு மேற்கொண்டு பேசினேன். பிரபாரகனின் சடலம் இருப்பதாக கூறியதும் ராணுவத் தளபதி "ஆர் யூ ஷ்யூர்?' என்று கேட்டார். "ஷ்யூர் சார், எந்த சந்தேகமுமில்லை. பிரபாரகனின் சடலத்தை இனங்கண்டுள்ளோம் என நான் பதிலளித்தேன் என்று கூறியுள்ளார் குணரத்ன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+