ராமேஸ்வரம் கோவிலுக்கு சுவிஸ் பெண்மணியின் ஆச்சரிய நன்கொடை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி ரூ. 2.08 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ. 4 லட்சம் நன்கொடையையும் அவர் அளித்து வருகிறார்.
அவரது பெயர் எலிசபெத் ஸீகர். ஆனால் இவர் யார், எப்படி இருப்பார் என்பதே கோவில் நிர்வாகத்துக்குத் தெரியாதாம்.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் பானுமதி நாச்சியார் கூறுகையில், 2006ம் ஆண்டு நான் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்ற போது, கோப்பில் எலிசபெத் எழுதிய ஒரு கடிதம் இருந்ததைக் கண்டேன்.
அதில், கோவிலுக்கு தான் நன்கொடை தர விரும்புவதாகவும், எப்படி அனுப்ப வேண்டும் என்பதைத் தெரிவிக்குமாறும் கோரியிருந்தார் எலிசபெத்.
இதையடுத்து நான் அவருக்கு நன்றி தெரிவித்தும், எந்த வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என்பதையும் விவரித்து அவருக்கு பேக்ஸ் அனுப்பினேன்.
இதையடுத்து உடனடியாக ரூ. 4 லட்சம் பணத்தை நன்கொடையாக அனுப்பி வைத்தார் எலிசபெத். அன்று முதல் கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுதோறும் தவறாமல் ரூ. 4 லட்சம் பணத்தை அனுப்பி வருகிறார்.
தற்போது ரூ. 2.08 கோடியை அவர் அனுப்பி வைத்துள்ளார். இதை தமிழ்நாடு மின் நிதி கழகத்தில் டெபாசிட் செய்துள்ளோம் என்றார் நாச்சியார்.
தான் அனுப்பும் பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதையும் எலிசபெத் தெளிவாக குறிப்பிட்டுள்ளாராம். தினசரி பூஜைக்கான செலவுகள் தவிர, ஆண்டுதோறும் ஒரு முறை ருத்ர பூஜை மற்றும் மகாசிவராத்திரியன்று நடைபெறும் பூஜைக்கு செல்விட வேண்டும் என அவர் கூறியுள்ளாராம்.
இதுதவிர ஆண்டுதோறும் டிசம்பர் 11ம் தேதியன்று 101 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளாராம்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications