தீவிரவாத மிரட்டல்-தமிழக போலீசாருடன் சிதம்பரம் ஆலோசனை
சென்னை: தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லஸ்கர் தீவிரவாதி சயீத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து உளவுத்துறை தென் இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடார்ந்து லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி முகம்மது உமர் மத்னியை டெல்லியில் கைது செய்தனர். அவன் சென்னையில் பல இளைஞர்களை தேர்வு செய்து தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தான்.
இதையடுத்து தமிழக டிஜிபி ஜெயின், சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராதாகிருஷ்ணன், உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடம் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவல்லிக்கேணியில் நடந்த போக்குவரத்து போலீசாருக்கான உடல் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் கூறுகையில்,
சென்னைக்கு அதிக வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் குறித்த பட்டியலை ஹோட்டல்களில் கேட்டுள்ளோம். அனைத்து ஹோட்டல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் வங்கதேசத்தினர் அதிகம் இருக்கின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தீவிரவாத மிரட்டல் இருப்பதாக அடிக்கடி எச்சரிக்கப்பட்டு வருகிறோம். சென்னை நகரில் பாதுகாப்பு எப்போதும் தீவிரமாகத்தான் உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும், வணிக வளாகங்களிலும், கோவில்களிலும், பஸ், ரெயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தமிழகத்துக்கு எந்த தீவிரவாத மிரட்டலும் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் என்றார் ராஜேந்திரன்.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications