சென்னை மின்சார ரயிலுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததை அடு்தது போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். இறுதியில் அவர் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு மின்சார ரயில் ஒன்று திருவள்ளூர் நோக்கி கிளம்பியது. ரயிலை குமரேசன் என்ற டிரைவர் ஓட்டினார். துளசிதாஸ் என்ற கார்டு பணியில் இருந்தார்.
ரயில் அம்பத்தூரை தாண்டிய நிலையில் கார்டு துளசிதாசுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். அதில் மின்சார ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடித்துவிடும் என்றும் கூறினார்.
கார்டு, டிரைவருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார். இதையடுத்து வண்டி ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. நிலைய அதிகாரி, ரயில்வே போலீஸ் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் மற்றொரு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த மாதத்தில் மின்சார ரயிலை தீவிரவாதி ஒருவன் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, சமீபத்தில் உளவுத்துறை தென் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்தது போன்றவற்றால் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
ரயில் முழுவதையும் சல்லடை போட்டு தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. சுமார் மூன்று மணி நேர சோதனைக்கு பின்னர் அதிகாலை 2.40 மணிக்கு அது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications