மழையில் சரிந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூரை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கடும் மழை காரணமாக கேந்திரிய வித்யாலயா பள்ளியின் கூரை ஒன்று சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வகுப்புகள் நடைபெறவில்லை என்பதால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தென் மேற்கு பருவமழை தொடங்கியதை அடு்தது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் வரண்டு கிடந்த நீர்நிலைகள், நிரம்பி வழிகின்றன.
தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வீடுகள் சேதமடைந்தன. வாழைதோட்டங்கள் மொத்தமாக சாய்ந்தன. மரங்கள் சாய்ந்து, சாலைகளில் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலத்த காற்று மற்றும் கனத்த மழை காரணமாக நாகர்கோவில் அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தற்காலிக கட்டிடத்தின் கூரை சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது மாணவர்கள் அங்கு இல்லை என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஒருவேளை பள்ளிக்கூடம் நடந்த சமயத்தில் விழுந்திருந்தால் என்ன செய்வது...
கும்பகோணம் தீவிபத்துக்கு பின்னர் பள்ளிகளில் குடிசை இருக்ககூடாது என உத்தரவிட்ட தமிழக அரசு, கூரை இடிந்து விழுந்து குழந்தைகள் பாதிக்கப்படும் ஒரு சம்பவம் நடக்கும் முன் உடனடியாக அனைத்து பள்ளிகளையும் முழுமையான, தரமான சிமென்ட் கட்டிடங்களாக மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications