ஆரணி ஏரியில் மனித எலும்புகூடு- விசாரணை
ஆரணி: ஆரணி அருகே ஏரி ஒன்றில் மனித எலும்புக் கூடு கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி அருகே தேவிகாபுரம் சாலையில் உள்ளது திருமலை சமுத்திரம் ஏரி. இந்த ஏரியில் மழை காலத்தில் நீர் வரத்து அதிக அளவில் இருக்கும். ஆனால் கோடை காலத்தில் நீரின்றி ஏரி வறண்டு கிடக்கும்.
இந்த நிலையிஸ், ஏரியின் மையப் பகுதியில் மனித எலும்பு கூடு கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இத் தகவல் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்தனர். இது குறித்து ஆரணி நகர கிழக்கு பிரிவு விஏஓ தட்சிணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், வேலூரில் இருந்து தடய அறிவியல் நிபுணர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ஏரியில் கிடந்த மண்டை ஓடு, கால், கை, மார்பு எலும்புகள் ஆகியவற்றை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கிண்டிக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையில் கடந்த மாதம் 20ம் தேதி ஆரணி வடியராஜா தெருவை சேர்ந்த லட்சுமி (45) என்பவரின் கணவர் வெங்கடேசன் காணாமல் போனதாக கூறப்படுகிறத. இந்த எலும்புக் கூடு அவருடையதுதானா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications