ஓய்வெடுக்க மொரீஷியஸ் போனார் விஜய்காந்த்!

அவர்களை விமான நிலையத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனும், இதர நிர்வாகிகளும் வழியனுப்பி வைத்தனர்.
இதனால் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வழக்கமான சுற்றுலாப் பயணம்தான் என்றும், தனக்கும் சற்று மாறுதல் தேவைப்படுவதால் குடும்பத்தினருடன் ஒரு வாரகாலம் மொரீஷியஸில் தங்கியிருக்கச் செல்வதாகவும் விஜய்காந்த் தெரிவித்தார்.
இந்த மொரீஷியஸ் பயணத்தை இன்னொரு வகையிலும் பயனுள்ளதாக மாற்ற திட்டமிட்டுள்ளாராம் விஜய்காந்த். தானே இயக்கி நடிக்கும் விருதகிரி படத்தின் துவக்கப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவும், மிச்சமுள்ள ஸ்க்ரிப்டை எழுதி முடிக்கவும் அவர் இந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம்.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 18ம் தேதி சென்னை திரும்பும் விஜய்காந்த், அடுத்த சில தினங்களுக்குள் மீண்டும் விருதகிரி படத்துக்காக வெளிநாட்டுக்குப் பயணமாகிறார்.












Click it and Unblock the Notifications