ஜார்க்கண்ட்டில் நக்சலைட் கண்ணிவெடித் தாக்குதலில் 11 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கர கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
செரங்க்தா - அருவாங்கா கிராமங்களுக்கு இடையே இந்த கண்ணிவெடித் தாக்குதல் நடந்துள்ளது.
மினி டிரக் ஒன்றில் உள்ளூர் போலீஸாரும், சிஆர்பிஎப் போலீஸாரும் கூட்டாக ரோந்து சென்றபோது நக்சலைட்டுகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த சம்பவத்தில் 11 பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications