சென்னை-திருந்செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரியாகிறது!
சென்னை: திருச்செந்தூர்-சென்னைக்கு இடையே தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரசை தினசரி இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என ரயில்வே துறை இணை அமைச்சர் அகமது தெரிதிவித்துள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை, ரயில்வை துறை அமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து வாரம் ஒரு முறை ஓடும் திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரசை தினசரியாக மாற்றும்படி கோரிக்கை விடுத்தார். அவரும் அதை பரிசீலிப்பதாக சொன்னார்.
இந்நிலையில் எழும்பூரில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தை துவக்கி வைத்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னை, வியாசர்பாடியில் நடந்த ரயில் விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து தற்போது சென்ட்ரல் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மின்சார ரயில்களுக்கான சாவி டிரைவர்களிடம் நேரடியாக கொடு்க்கப்படுகிறது. விபத்து நடந்த சமயத்தில் ரயில்வே மேலாளர்களாக இருந்தவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர்.
டிரைவர்களின் கைரேகைகளை என்ஜினில் பதிவு செய்து ரயில்களை இயக்கும் நவீன தொழில்நுட்ப முறையை கொண்டு வர ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரூ. 5 கோடி மதிப்பில் சுழலும் கேமிராக்கள் மூர் மார்க்கெட் புறநகர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ரயிலை யார் இயக்குகிறார்கள் என்ற விவரங்களை கேமிரா மூலம் தெரிந்து கொள்ளலாம். ரூ. 55 கோடி செலவில் புறநகர் ரயில் நிலையங்களை ஒருங்கிணைக்கும் வகையில் கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன.
திருச்செந்தூர்-சென்னை ரயிலை தினமும் இயக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். ரயில்களில் புதிதாக போடப்பட்ட பக்கவாட்டு படுக்கைகள் செப்டம்பர் 13ம் தேதிக்குள் அகற்றப்படும். ரயில் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக போலீசார் மீது அதிக புகார்கள் வருகின்றன. தவறு செய்யும் போலீசார் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
மதுரை-திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை பணி முடிந்தது...
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் கூறுகையில்,
விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகலப்பாதை அமைக்கும் பணி மூன்று மாதத்தில் முடிவடைந்து விடும். மதுரை-திண்டுக்கல் இடையே இரண்டாவது அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டது. பாதுகாப்பு அதிகாரி ஆய்வுக்காக காத்திருக்கிறது.
செங்கல்பட்டு- விழுப்புரம் இடையே 2-வது அகலப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் அது நிறைவடையும். சென்னை- திருச்சி அகலப்பாதை மின் மயமாக்குதல் பணி 3 மாதங்களில் முடிந்து விடும் என்றார்.
ஸ்மார்ட் கார்டு அறிமுகம்...
மேலும், ரயில் நிலையங்களில் நிற்கும் நீண்ட வரிசையில் நிற்காமல் புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களின் வசதிக்காக உடனடியாக டிக்கெட் பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் ரூ. 100 மதிப்பிலான கார்டில் ரூ. 70 வரை டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். 24 மணி நேரமும் டிக்கெட் பெறக்கூடிய இந்த வசதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ளது.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications