உ.பி: காங் வென்றிக்கு ராகுலே காரணம்-சோனியா
ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியே காரணம் என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
தான் வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதிக்கு இன்று சென்றார் சோனியா. அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் சோனியா ரேபரேலி வருவது இதுவே முதல் முறையாகும்.
அங்கு அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றி பெற ராகுல் காந்தியின் முயற்சிகள் பெரிதும் உதவியாக இருந்தன. உ.பியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சி தருகிறது என்றார் சோனியா.
2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உ.பியில் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 21 தொகுதிகளைக் கைப்பற்றி மாயாவதி, முலாயம் சிங் யாதவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications