For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் லோட்டேயின் பிரமாண்ட சாக்லேட் தொழிற்சாலை

By Staff
Google Oneindia Tamil News

Lotte
சென்னை: கொரியாவின் புகழ்பெற்ற நிறுவனமான லோட்டே கன்பெக்ஷனரி தமிழகத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் தனது புதிய தொழிற்சாலையைத் திறக்கிறது.

சென்னை திருமழிசைக்கு அருகே உள்ள நேமம் கிராமத்தில் இந்த நிறுவனம் அமைகிறது. ஏற்கெனவே இதன் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

1967-ல் கொரியாவில் துவங்கப்பட்டது லோட்டே கன்பெக்ஷனரி. 6000 பணியாளர்களுடன் இயங்கும் இந்நிறுவனம் ஆண்டுக்கு 900 மில்லியன் டாலர் விற்பனை செய்கிறது. சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் இந்நிறுவனத்துக்கு தொழிற்சாலைகளும் கிளை அலுவலகங்களும் உள்ளன.

2004-ல் முருகப்பா குழுமத்தின் பாரி கன்பெக்ஷனரியை வாங்கியதன் மூலம் இந்தியாவில் அடியெடுத்து வைத்தது லோட்டே.

32 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்நிறுவனம், சூயிங்கம், ஸ்பியர்மின்ட், சாக்லேட்டுகள், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள், ஐஸ்க்ரீம், லோட்டே ப்ரஷ் மின்ட், பிஸ்கட்டுகள், மருந்துப் பொருட்கள் என ஏராளமானவற்றை உற்பத்தி செய்கிறது.

ஏற்கெனவே ஹுண்டாய், வாஷின், மாண்டோ, இல்ஜின் உள்ளிட்ட 50 கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் வலுவாக கால்பதித்துள்ளன. இப்போது இந்த நிறுவனங்களுடன் லோட்டேவும் இணைகிறது. 2010-ல் முழு வீச்சில் உற்பத்தியைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்நிறுவனம், வேறு சில துறைகளிலும் ஆர்வம் காட்டுகிறது. குளிர்பான உற்பத்தி, சுற்றுலா வளர்ச்சி, ஓட்டல்கள் போன்றவற்றில் முதலீடு செய்யவும் இந்நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X