பேராசிரியைகள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிய தடை!
கான்பூர்: மாணவிகளுக்கு ஜீன்ஸ், டைட்ஸ் போட தடை விதித்த கான்பூர் கல்லூரிகள் தற்போது பேராசிரியைகள் கையில்லாத ஜாக்கெட், இறுக்கமான ரவிக்கை ஆகியவற்றை அணிந்து வர தடை விதித்துள்ளது.
கலாச்சாரத்தை காப்பது, ஆபாச தோற்றத்தைத் தவிர்ப்பது, ஈவ் டீசிங்கை தடுப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கான்பூரில் உள்ள சில கல்லூரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் அணியவும், டைட்டான உடைகளை போட்டு வரவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு மாணவிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியைகள் மட்டும் கையில்லாத ஜாக்கெட் உள்ளிட்டவற்றைப் போட்டு வரலாம், எங்களுக்கு மட்டும் கட்டுப்பாடா என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து கல்லூரி ஆசிரியைகளுக்கும் இப்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன கான்பூர் கல்லூரிகள்.
அதன்படி கை இல்லாத ஜாக்கெட் போடக் கூடாது. ரவிக்கை இறுக்கமாக, உடலை ஒட்டியபடி இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளைப் போல எதிர்ப்பு தெரிவிக்காமல் சமர்த்தாக இந்த கட்டுப்பாட்டை ஆசிரியைகள் ஏற்றுக் கொண்டுள்ளனராம்.
அதுக்கு இது, சரிக்குச் சரியாப் போச்சு!












Click it and Unblock the Notifications