கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து!
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கடலில் நீர்மட்டம் உயர்ந்ததால், கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை(133 அடி உயரம்)க்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே சுற்றுலா படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
வழக்கம் போல படகு போக்குவரத்து தொடங்கிய போது விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் நீர்மட்டம் திடீரென தாழ்ந்தது. இதனால், படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, படகு போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது.
கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு வந்த பின்பு, மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications