சீ ராக் ஹோட்டலை வாங்கியது டாடா குழுமம்!

மும்பையின் பாந்த்ரா பகுதியில் அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது சீ ராக். ஐடிசி குழும கட்டுப்பாட்டில் இருந்தது. மும்பையில் தாஜ் ஓட்டலுக்கு நிகரான பழமையும் பெருமையும் மிக்கது இந்த ஓட்டல்.
இந்த ஓட்டலை வாங்கியதன் மூலம் மும்பை நகரில் 1425 ரூம்களுடன் பிரமாண்ட கூடிய நான்கு பிரம்மாண்ட ஓட்டல்களைக் கொண்டதாக பரிமாணமெடுத்துள்ளது டாடாவின் தாஜ் குழுமம்.
6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சீ ராக் ஓட்டலில் மட்டுமே 440 அறைகள் உள்ளன. இந்த ஓட்டலை முழுமையாக இடித்துவிட்டு, மேலும் புதிய வசதிகள் மற்றும் நவீன மாடலில் மிகப் பிரமாண்டமாக புதிய ஓட்டலை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது தாஜ் குழுமம்.
உலகத் தரத்திலான ஓட்டல், ஷாப்பிங் மால், சர்வதேச கருத்தருங்குகள் நடத்தப் போதுமான ஹால் என பிரமாண்ட கட்டடத்தை எழுப்பவிருப்பதாகவும், மும்பையின் முக்கிய லேண்ட்மார்க்காக இந்த இடம் திகழும் என்றும் தாஜ் குழுமம் தெரிவித்துள்ளது.
இது தவிர, வடக்கு மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலையும் தன் பொறுப்பில் எடுக்கிறது தாஜ்.












Click it and Unblock the Notifications