கடற்கொள்ளையரிடம் பிடிபட்ட இந்திய மாலுமிகளை மீட்ட நேட்டோ கப்பல்

Subscribe to Oneindia Tamil

மொகாதிசு: சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய மாலுமிகள் 14 பேரை நேட்டோ போர்க் கப்பல் மீட்டுள்ளது.

ஏமன் வளைகுடா பகுதிகளுக்கு செல்லும் கப்பல்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த ஆண்டு 111 கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், இந்தாண்டு முதல் ஐந்து மாதத்தில் மட்டும் அது 133 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 3ம் தேதி சோமாலிய தலைநகர் மொகாதிசுவுக்கு அருகில் இருக்கும் பிரேவா என்ற துறைமுகத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு குஜராத்தை சேர்ந்த கப்பல் 14 மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்த விஎச்எப் ரேடியோவை உடைத்து கப்பல் அதிகாரிகளால் உதவி குரல் எழுப்ப முடியாமல் செய்து விட்டனர்.

பின்னர் கப்பலை கடத்தி சென்ற கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்தவர்களை அடுத்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். உடல் முழுவதும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இந்திய மாலுமிகள் வைத்திருந்த ரேடியோ, போன்கள், டிவி மற்றும் குடும்பத்தினருக்காக வாங்கி வைத்திருந்த பரிசு பொருட்கள் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கப்பலில் இருந்து மாலுமிகளின் உடல்நிலை மோசமடைய கடற் கொள்ளையர்கள், மாலுமிகளை விடுவித்துள்ளனர்.

நடுக்கடலில் உணவு எதுவுமின்றி தத்தளித்து கொண்டிருந்த அவர்கள் போர்ச்சுகீஸைச் சேர்ந்த நேட்டோ போர்கப்பல் ஒன்று மீட்டு கரைக்குக் கொண்டு வந்தது.

போர்ச்சுக்கீசிய கப்பலின் தலைவர் டாரியோ பிரசியாசோ கூறுகையில், நாங்கள் அவர்களை பார்த்து காப்பாற்றவில்லை என்றால் அனைவரும் இறந்து போயிருப்பார்கள். அவர்களிடம் கைவசம் எந்த உணவு பொருளும் இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+