கல்யாண வீட்டில் மின்சாரம் தாக்கி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே கல்யாண வீட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் பலியானார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையனூர் ஆவுடை சிவன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலெட்சுமி. பீடி சுற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
ஜெயலெட்சுமி நேற்று காலை 6 மணிக்கு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். அங்கு மின் வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் ஜெயலெட்சுமி அதில் கை வைத்தார்.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications