நெல்லையில் புதிய மேம்பாலம்-17ம் தேதி தொடக்கம்
நெல்லை: நெல்லை வண்ணார்பேட்டையில் கட்டப்படவுள்ள புதிய மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி வரும் 17ம் தேதி தொடங்குகிறது.
நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை ரவுண்டானாவில் 15.68 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
607 மீட்டர் நிளத்திற்கு தெற்கு-வடக்காக அமைக்கப்படும் இந்த மேம்பாலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை கடந்த மார்ச் மாதம் நடந்தது. பின்னர் ரவுண்டானாவின் தெற்கு, வடக்கு பகுதியில் இருபுறங்களிலும் இருந்த அக்கராமிப்புகள், டீக்கடைகள், பழக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதை தொடர்ந்து வடக்கு பைபாஸ் சாலையோரமாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதைடுத்து தெற்கு பைபாஸ் சாலையிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே கான்கிரிட் தூண்கள் அமைப்பதற்காக துளை போடும் பணி வரும் 17ம் தேதி துவங்குகிறது. முதற் கட்டமாக தெற்கு பைபாஸ் சாலையில் மூன்று துளைகள் போடப்படுகின்றன. இதை தொடர்ந்து வடக்கு பைபாஸ் சாலையிலும் மூன்று துளைகள் போடப்படுகிறது.
இருபுறங்களிலும் தூண்கள் அமைப்பதற்காக மொத்தம் 104 துளைகள் போடப்படுகின்றன. ஒவ்வொரு துளையும் 21 அடி ஆழத்திற்கு போடப்படுகிறது.