வேலூர் கலெக்டர் வீட்டை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்
வேலூர்: வேலூர் டோல் கேட் உழவர் சந்தையில் இடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவகாரத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட
முயன்றனர்.
வேலூர் டோல் கேட் உழவர் சந்தையில் இடத்தை ஒதுக்கீடு செய்வது செய்வது தொடர்பாக வியாபாரிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விவகாரத்தில், போலீசாரும், அதிகாரிகளும் தலையிட்டு குலுக்கல் முறையில் மட்டுமே கடைகள் ஒதுக்க முடியும் என்று உறுதியாக
கூறினர்.
இந்த நிலையில், தங்களுக்கு கடைகள் ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கூறி விவசாயிகள் சிலர் ஒன்று திரண்டு வேலூர் மாவட்ட கலெக்டர் பங்களா செல்லும்
வழியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வகுமார் மற்றும் போலீசார் விவசாயிகளை உழவர் சந்தைக்கு அழைத்து சென்று
உழவர் சந்தை தனி அலுவலர் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருதரப்பின் வாதங்களை கேட்ட போலீசார், அதிகாலை 5 மணிக்கே குலுக்கல் நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் யாரும் கடைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது
என்றும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பொருட்களை கடையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.
இதனை இரு தரப்பு விவசாயிகளும் ஏற்றுக் கொண்டதால் பிரச்னை சுமூக முடிவுக்கு வந்தது.