'இலங்கை'-நூற்றுக்கணக்கான ஊனமுற்றோர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தடையை மீறி ஊர்வலம் சென்ற 500க்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் 18ம் தேதி இலங்கையில் நந்திக்கால்வாய் என்ற இடத்தில் ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கூண்டோடு கொன்று குவித்தது. இதை நினைவுகூறும் வகையில் இன்று அகில இந்திய மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
ஆனால், இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருப்பினும் இன்று காலை சென்னை மன்றோ சிலை அருகே நூற்றுக்கணக்கான ஊனமுற்றோரும் பெண்களும் கூடினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி தடையை மீறி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications