சட்டசபை-வீ்ல் சேரிலேயே அமர்ந்த கருணாநிதி
சென்னை: சட்டசபைக் கூட்டத்தில் சக்கர நாற்காலியிலேயே வந்து அதிலேயே அமர்ந்தார் முதல்வர் கருணாநிதி. இதற்காக அவரது இருக்கை அகற்றப்பட்டிருந்தது.
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பின் சக்கர நாற்காலியில் தான் முதல்வர் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் பயன்படுத்தும் வேனிலும் மாற்றம் செய்யப்பட்டு, நாற்காலியை 'ஹைட்ராலிக் பவர்' மூலம் வேனுக்குள் கொண்டு செல்லவும் கீழே இறக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சென்றபோதும் சக்கர நாற்காலியையே அவர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சட்டமன்றத்துக்கும் அதிலேயே வந்து, அதிலேயே அமர்கிறார்.
ஸ்டாலி்ன் பேச்சை திருத்திய கருணாநிதி...
துணை முதல்வரானதற்காக தன்னை உறுப்பினர்கள் பாராட்டியதற்கு நன்றி தெரிவத்துப் பேசிய ஸ்டாலின், ''அதிமுக சார்பில் எஸ்.வி.சேகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்'' என்றார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, உடனே ஸ்டாலினை அருகே அழைத்து முதல்வர் ஏதோ சொன்னார்.
இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், ''அதிமுக சார்பில் அல்ல, அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் எஸ்.வி.சேகர்'' என்று திருத்திக் கூறினார்.
இடம் மாறிய மதிமுக..
அதே போல மதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களான மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டதால் சட்டசபையில் அவர்களது இடங்களும் மாறியிருந்தன. கண்ணப்பனுக்கு முன் வரிசையில் இடம் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications