நக்சல் வேட்டை-'ஆக்சனில்' துணை ராணுவம்!

மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் புகுந்து கொண்டுள்ள மாவோ நக்சலைட்டுகள் பெரும் அட்டூழியம் செய்து வருகின்றனர். லால்கர் நகரை அவர்கள் பிடித்து விட்டனர். அங்குள்ள போலீஸாரை விரட்டியடித்து விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியினரையும் படுகொலை செய்து வருகின்றனர்.
முதல்வர் புத்ததேவ் பட்டசாரியாவையும் அவர்கள் குறி வைத்துள்ளனர். லால்கர் மட்டுமல்லாமல் அருகில் உள்ள பகுதிகளையும் அவர்கள் ஆக்கிரமித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவோ அட்டகாசத்தை ஒடுக்க துணை ராணுவப்படையினரை அனுப்புமாறு மேற்கு வங்க மாநில அரசு கோரியது. இதையடுத்து மேற்கு மிதினாப்பூருக்கு துணை ராணுவம் விரைந்தது.
இந்த வீரர்கள் இன்று காலை முதல் மாவோயிஸ்டுகளுக்கான எதிரான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மாநில டிஜிபி சுஜித் குமார் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
விரைவில் மாவோயிஸ்டுகள் ஒடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நக்ஸல்கள் கட்டுப்பாட்டில் உள்ள அம் மாவட்டத்தின் 50 கிராமங்களும் துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்த கிராமங்களுக்குள் போலீசோ துணை ராணுவமோ நுழைந்தால் ரத்த ஆறு ஓடும், நாடே தீப்பற்றி எரியும் என மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தை சாடும் மத்திய அரசு..
இதற்கிடையே, நக்சலைட் அட்டகாசத்தை ஒடுக்கும் வேலை மேற்கு வங்க மாநில அரசுடையது. அதிலிருந்து அது தப்ப முயலக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், புத்ததேவ் அரசுதான் இதைக் கையாள வேண்டும். நக்சலைட்டுகளை ஒடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
லால்கரில் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஒருபக்கம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க விரும்புகிறது. ஆனால் அதன் விளைவுகளை நினைத்து பயப்படுகிறது. இதில் எந்த முடிவு சிறந்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் கடமையாகும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
இதற்கிடையே, லால்கர் விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி முயன்று வருகிறார். மேற்கு வங்க மாநில அரசின் திறமையற்ற நிர்வாகமே இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மேற்கு வங்க மாநில அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மமதா வலியுறுத்தியுள்ளார்.
மொத்தத்தில் லால்கர் விவகாரம் தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான சண்டையாக மாறி வருகிறது.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications