இந்தியாவில் ரூ.6700 கோடி முதலீடு செய்யும் மிச்செலின்

1 பில்லியன் யூரோ முதலீட்டில் (தோராயமாக ரூ.6700 கோடி) அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த தொழிற்சாலை இந்தியாவில் தனது உற்பத்தியை ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. இந்த உத்தேச முதலீட்டுத் தொகையின் அளவு இன்னும்கூட அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அருகே இந்தத் தொழிற்சாலையை அமைப்பதற்கு பொருத்தமான இடம் தருமாறு தமிழக அரசை மிச்செலின் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக மிச்செலின் அதிகாரிகள் சிலர் தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளனர்.
புதிய நிறுவனம் 'மிச்செலின் இந்தியா தமிழ்நாடு டயர்ஸ்' என்ற பெயரில் அமையும். இந்த தொழிற்சாலை திட்டமிட்டபடி அமைந்தால் தமிழகத்தில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார் மிச்செலின் சார்பில் தமிழகம் வந்துள்ள பெண் அதிகாரி.
உலகின் முன்னணி டயர் நிறுவனமான மிச்செலின் கடந்த ஆண்டு பிரான்ஸில் உள்ள தனது தொழிற்சாலையில் 1500 பணியாளர்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது!












Click it and Unblock the Notifications