Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரும்பி வர மாட்டேன் என உறுதியளிக்க இலங்கை அகதிகளுக்கு அரசு நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

Refugee Woman
சென்னை: இலங்கைக்கு திரும்பச் செல்ல விரும்பும் அகதிகள், இனிமேல் திரும்பி வர மாட்டேன் என எழுதித் தர வேண்டும் என தமிழக அரசு திடீர் நிபந்தனை போட்டுள்ளதாம்.

கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் மிகக் கொடூரமான பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.

இந்த அகதிகள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

83க்குப் பிறகு தொடர்ந்து அவ்வப்போது அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது இலங்கையில் போர் ஓய்ந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை அரசு முடக்கி விட்டது. இதையடுத்து அகதிகளில் பலர் மீண்டும் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு அரசு தற்போது ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புவோர், இனிமேல் நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வர மாட்டேன் என கியூ பிரிவு போலீஸாருக்கு எழுத்து மூலமாக உத்தரவாதம் தர வேண்டும் என அந்த நிபந்தனை கூறுகிறதாம்.

இதுகுறித்து அகதிகள் குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும் தாயகம் திரும்பிச் செல்ல அவர்கள் ஆர்வமாக இருப்பதால் பலர் எழுதித் தந்து விட்டு திரும்பிச் செல்லலாமா என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+