For Daily Alerts
Just In
இந்தியாவுக்கு கடன் தர ஆசிய வளர்ச்சி வங்கிக்கு சீனா கடும் எதிர்ப்பு
டெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி வழங்க முடிவு செய்திருப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் முழுவதையும் தனது நாட்டின் ஒரு பகுதியாக பினாத்திக் கொண்டிருக்கிறது சீனா என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அருணாச்சல் பிரதேசத்தில், வெள்ள நிர்வாக திட்டம் ஒன்று செயல்படுத்ப்படவுள்ளது. இதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அளிக்கிறது.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த செயலின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி தனது பெயரை தானே கெடுத்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது சீனா.
ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு நாங்கள் எதுவும் செய்யமுடியாது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, June 20, 2009, 16:57 [IST]