For Quick Alerts
For Daily Alerts
Just In
வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் - இதுவரை 50 பேர் பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
டெல்லியில் நேற்று 3 பேருக்கும், பெங்களூரில் 2, மும்பையில் ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து பன்றிக் காய்ச்சல் தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுவரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 50 பேரில் 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Story first published: Saturday, June 20, 2009, 17:43 [IST]