For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து இலங்கையை காப்பாற்ற வேண்டும் - ராஜபக்சே

By Staff
Google Oneindia Tamil News

Rajapakse
கொழும்பு: உலகில் உள்ள அனைத்து புத்த நாடுகளும் இணைந்து, இலங்கைக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் சதியைத் தகர்த்து, இலங்கையைக் காக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இலங்கையை முழுமையான புத்த நாடாகவும், சிங்கள தேசமாகவும் மாற்றும் சதித் திட்டத்தின் முதல் படியாக இது பார்க்கப்படுகிறது.

பெளத்தம் என்ற மத உணர்வைத் தூண்டி விட்டு, உலகில் உள்ள பெளத்த மத நாடுகளின் ஆதரவைத் திரட்டி, அதன் மூலம் மேற்கத்திய நாடுகளையும், இலங்கையை விமர்சிக்கும் நாடுகளையும் சமாளிக்க ராஜபக்சே திட்டமிடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து கொழும்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜபக்சே பேசுகையில், மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து இலங்கையை காப்பாற்ற உலகில் உள்ள பௌத்த நாடுகள் முனவர வேண்டும். இந்த நாடுகளை இலங்கையின் பக்கம் திருப்புவதில் பௌத்த துறவிகள் முக்கியப் பணிகளை ஆற்ற முடியும்.

பண்டைய காலத்தில் இருந்து பௌத்த துறவிகள் இலங்கையின் வரலாற்றில் பல முக்கியப் பணிகளை ஆற்றியுள்ளனர். அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்தப் பணிகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

இதன் மூலம் ஏற்கனவே சிங்கள இனவெறியுடன் நடந்து வரும் புத்த பிக்குகள் தமிழர்களுக்கு எதிராக மேலும் தீவிரமாக நடப்பார்களோ என்ற அச்சம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X