சென்செக்ஸ்: பாஸிட்டிவ் துவக்கம்!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் இன்று எடுத்த எடுப்பில் 140 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியுள்ளது.
இந்திய தொழில்துறையில் அந்நிய முதலீடுகளின் வருகை அதிகரிக்கத் துவங்கியுள்ளதையடுத்து, பங்குச் சந்தையில் இன்று பாஸிட்டிவ்வான போக்கு துவங்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வாரத்தில் இதே நிலை நீடிக்கக் கூடும் என்றும் கூறியுள்ளனர்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 38 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் எடுத்த எடுப்பிலேயே 3.16 சதவீத லாபத்தில் கைமாறின ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள்.
ரியல் எஸ்டேட், உலோகத் துறை பங்குகளில் ஆரோக்கியமான போக்கு தெரிந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா, கிராஸிம், பிஎச்இஎல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் லாபத்தில் கைமாறின.
இன்றைய காலை நேர நிலவரப்படி இந்தியா தவிர, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் பங்குச் சந்தைகளிலும் ஏறுமுகம் தெரிகிறது.












Click it and Unblock the Notifications