ஜிஎஸ்எம் சேவை: டாடாவும் களமிறங்கியது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனம் விரைவில் தனது ஜிஎஸ்எம் சேவையைத் துவக்குகிறது.
டாடா டாகோமோ எனும் பிராண்டில் தமிழ்நாட்டில் இந்த ஜிஎஸ்எம் மொபைல் சேவை அடுத்த வாரம் முதல் செயல்படும்.
அதற்கடுத்த சில தினங்களிலேயே கர்நாடகா, கேரளா மற்றும் ஒரிசா போன்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனம் தனது சேவையைத் ஜிஎஸ்எம் சேவையைத் தொடங்குகிறது.
சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் செல்போன் சேவை வழங்குவதில் நாட்டில் இரண்டாவது பெரிய நிறுவனம் டாடா டெலிசர்வீஸஸ்.
ரிலையன்ஸ் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில்தான் நாடுமுழுவதும் தனது ஜிஎஸ்எம் செல்போன் சேவையைத் தொடங்கியது ரிலையன்ஸ். அடுத்து இப்போது டாடாவும் களமிறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications