பிச்சைக்கார பெண்ணை கற்பழித்த ஆந்திர போலீசார்

Subscribe to Oneindia Tamil

குண்டூர்: வாய் பேச முடியாத, மனநிலை பாதிக்கப்பட்ட பிச்சைக்கார *பெண்ணை கற்பழித்த இரண்டு போலீஸ்காரர்களை ஆந்திரா போலீஸ் தேடி வருகிறது.

ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த மாசவரம் பகுதி பேருந்து நிலையத்தில் மாதுரி என்ற பெண் பிச்சையெடுத்து வந்தார். வாய்பேச முடியாமல், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பிச்சைக்கார பெண்ணுக்கு ஆதரவாக நாகூர்வளி என்பவர் தங்கி இருந்தார்.

இவர்கள் இருவரும் சுற்றுவட்டார பகுதிகளில் பிச்சையெடுத்து விட்டு பின்னர் பேருந்து நிலையத்தில் உறங்குவது வழக்கம்.

இந்நிலையில் அருகில் இருந்த காவல் நிலையத்தில் வேலை பார்த்த சோமி ரெட்டி, ஜான் பாபு என்ற இரண்டு போலீசார்கள் சம்பவ தினந்தன்று இரவு குடிபோதையில் பணிக்கு வந்தனர். குடிபோதையில் நிதானம் தவறிய அவர்கள் பேருந்து நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த பிச்சைக்கார பெண்ணான மாதுரியை ஜீப்பில் ஏற்றி கொண்டு பறதனர்.

இதை தடுக்க முயன்ற நாகூர்வளியை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த பிச்சைக்கார பெண்ணை அருகில் இருந்த மைதானத்தில் வைத்து கற்பழித்துள்ளனர். இந்த கொடூர செயலுக்கு வெங்கடேசுவரலு, சத்யாநாராயணா மற்றும் குகிலமர்க் ஆகிய மூன்று பேரும் துணை புரிந்துள்ளனர்.

பின்னர் ஜான் பாபுவும், சோமி ரெட்டியும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் தலைமறைவாகிவிட்ட அந்த இரண்டு போலீசாரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+