டாக்டர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் பிரபல டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி டாக்டர் பாஸ்கரன் என்பவர் மர்ம நபர்கள் கடத்திச் செல்லப்பட்டு, கொலையானார். இது கொலை குறித்து திண்டுக்கல் நகர வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொடர்ந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருந்தது.
இதை தொடர்ந்து இந்த வழக்கை தமிழக முதல்வர் கருணாநிதி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications