மீனவர்கள் கோஷ்டி மோதல்-போலீஸ் துப்பாக்கி சூடு
புதுச்சேரி: புதுச்சேரியில் இரு பிரிவு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பல வீடுகள் சூறையாடப்பட்டன. கலவரம் கட்டுகடங்காமல் போவதை கண்டு போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு மூலம் பதட்டத்தை தணித்தனர்.
புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் உள்ள அங்காள அம்மன்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னி்ட்டும், கடலில் மீன்பிடிப்பது தொடர்பாகவும் இரு பிரிவு மீனவர்களுக்குள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் பின்பு கலவரமாக உருவெடுத்தது. இதில் சக்திவேல், ராஜவேல் என்ற இரண்டு மீனவர்கள் மற்றும் மூன்று பெண்கள் படுகாயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிலரது வீடுகளும் சூறையாடப்பட்டன.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலவரத்தை கட்டுப்படுத்த வடக்குப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சிவதாசன் தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி ஏழு முறை துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கலவரத்திற்கு காரணமான வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த 40 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் கலவரம் வெடிக்காமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications