சம்பளம் 'கட்'...ஊழியர் ஸ்ட்ரைக்: தடுமாறும் ஏர் இந்தியா!

அரசுத் துறைக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இப்போது கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. கடந்த மாதத்துக்கான சம்பளம் 15 நாட்கள் தாமதமாக அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்த போதே ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இப்போது சம்பளத்தைக் கணிசமாகக் குறைப்போம் என நிர்வாகம் அறிவித்துள்ளதால் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஏர் இந்தியாவில் 31000 பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்குச் சம்பளமாக ஆண்டுக்கு ரூ.3100 கோடி செலவாகிறது.
இப்போது இதில் ரூ.500 கோடி வரை குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்து, அதை அறிவித்தும் உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஊழியர்கள், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கும் முடிவில் உள்ளனர்.
ஆனாலும் ஜூன் 30-ம் தேதி வரை, அரசின் பதிலுக்காகக் காத்திருப்பதாக அறிவித்துள்ளர்.
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஏர் இந்தியா நிறுவனம், தனியார் துறை விமான நிறுவனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. "ஒரு நாளைக்கு ரூ.15 கோடி நஷ்டத்தில் இந்த நிறுவனம் இப்போது இயங்கக் காரணம், நல்ல லாபத்தில் ஏர் இந்தியா விமானங்களை இயக்கிவந்த வழித்தடங்களின் தனியார் நிறுவனங்களை அனுமதித்ததே. இன்றைக்கு பல வழித்தடங்களில் ஏர் இந்தியா இல்லாமலே போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிறுவனத்தின் கழுத்தை நெறித்தது இந்திய அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும்தான்... ஒரு விதத்தில் தெரிந்தே செய்யப்படும் கொலை இது" என்கிறார் பிரபல டிராவல் ஏஜென்ஸியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர்.
ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பள பிரச்சினை, நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டம் போன்றவற்றை ஆராய விரைவில் 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்றும், விரைவில் அமைச்சரவை கூடி இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும், அதுவரை ஊழியர்கள் பொறுத்திருக்குமாறும் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏர் இந்தியாவின் இந்த நிச்சயமற்ற தன்மையால், பயணிகள் டிக்கெட் புக்கிங் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் தனியார் விமான நிறுவனங்களின் காட்டில் செம வசூல் மழை!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications