குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-ஜாங்கிட்
சென்னை: சென்னை புறநகர் பகுதியில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போலீசுக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புறநகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் தினமும் வாகன சோதனைகளை செய்து வருகிறோம்.
புறநகர் பகுதியில் நடக்கும் குற்றங்கள் பெரும்பாலும் முன்விரோதம் காரணமாக நடந்து வருகிறது.
பொதுமக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் எழுந்தால் அவர்கள் உடனே எங்களுக்கு தகவல் தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். குற்றவாளிகளை முற்றிலுமாக ஒழிக்க தேவையான ஒத்துழைப்பு மக்கள் தர வேண்டும்.
பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களிடம் உடனே புகார் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அனைத்து போலீசாருக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார் ஜாங்கிட்.












Click it and Unblock the Notifications