சோப்பு வாங்கினால்தான் 1 ரூபாய் அரிசி தருகிறார்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரேஷன் கடைகளில் 10 ரூபாய் சோப்பு வாங்கினால்தான் 1 ரூபாய் அரிசியை தருகிறார்கள் என்று சட்டசபையில் அதிமுக புகார் கூறியது.
உணவுத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பேசிய அதிமக உறுப்பினர் செங்கோட்டையன், ரேஷனில் 20 கிலோ அரிசி தருவதற்கு பதிலாக, பச்சை அட்டைக்கு 10 கிலோ அரிசிதான் கொடுப்பதாகக் கூறப்படுகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் வேலு, 3 பேர் உள்ள குடும்பத்துக்கு ஒருவருக்கு 4 கிலோ வீதம் 12 கிலோதான் கிடைக்கும். இது உங்கள் ஆட்சி காலத்தில் வகுக்கப்பட்ட வழிமுறை ஆகும் என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் பேசுகையில், 10 ரூபாய் சோப்பு வாங்கினால்தான், ஒரு ரூபாய் அரிசியை வாங்க முடிகிறது என்றார்.
அடுத்துப் பேசிய செங்கோட்டையனும், 5 ரூபாய் ஹமாம் சோப்பு வாங்கினால்தான், 1 ரூபாய் ரேஷன் அரிசியை தருகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications