பெண் கடத்தல்-இளைஞர் கைது-ஆபாச சிடி பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணைக் கடத்தியதாக ஜெபா என்ற வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆபாச சிடிக்கள், புகைப்படங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர் ஆபாசப் படம் எடுக்கும் கும்பலைச் சேர்ந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாலா என்ற பெண் தூத்துக்குடியி்ல் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு அவர் மாயமானார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜெபா என்பவர் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து ஏகப்பட்ட ஆபாச சிடிக்கள், புகைப்படங்கள் சிக்கியுள்ளன.
இவர் பெண்களைக் கடத்திச் சென்று ஆபாசப் படம் எடுக்கும் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதுதவிர கடத்திச் செல்லும் பெண்களை முக்கியப் பிரமுகர்களுக்கு விருந்து வைப்பதும் இவரது வழக்கம் என்று தெரிகிறது.
இந்த ஜெபா, உள்ளூர் கேபிள் டிவி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளாராம்.
ஜெபாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.