For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தமால், கோராபுட்டுக்குப் போகிறார் ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒரிசாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்த காந்தமால் மற்றும் கோராபுட் நகரங்களுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விஜயம் செய்கிரார்.

மாவோயிஸ்டுகள் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே மாவோயிஸ்ட்கள் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளுக்கு சிதம்பரம் செல்வது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 25ம் தேதி அங்கு செல்லும் ப.சிதம்பரம் 2 நாட்கள் அங்கிருந்து நிலைமைகளை ஆய்வு செய்யவுள்ளார்.

கடந்த ஆண்டு காந்தமாலில் பெரும் மதக் கலவரம் வெடித்தது. இந்து அமைப்புகளுடன் சேர்ந்து மாவோயிஸ்டுகளும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 43
பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

ஒரிசா மாநிலத்திலேயே மாவோயிட்கள் அட்டகாசம் அதிகமான பகுதியாக கருதப்படுவது மல்கான்கிரி. இதற்கு அருகில்தான் கோராபுட் உள்ளது. தற்போது கோராபுட்டிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு முளையிலேயே அவர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் நடவடிக்கைகளை முடுக்கி விடவே ப.சிதம்பரம் செல்வதாக தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X